போடி, பிப். 14: போடியில் உள்ள டாஸ்மாக் கடையில் புகுந்த ஏழரை அடி சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. நேற்று முன்தினம் கடை ஊழியர் சக்தி கடையை திறந்த போது உள்ளே பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், போடி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.