அரியலூர், பிப்.14: அரியலூர் மாவட்ட பாமக சார்பில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குசாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், வாலாஜ நகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் வைத்தி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் பேராசிரியர் செல்வக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆலோசனைகளை வழங்கினார்.