வையம்பட்டியில் பெண்ணிடம் 3 பவுன் நகை வழிப்பறி

மணப்பாறை, பிப்.12:  வையம்பட்டியில் இளம் பெண்ணிடம் 3 பவுன் நகை வழிப்பறி செய்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள  சரளப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி லட்சுமி (35). நேற்று இவர் வையம்பட்டி கடைவீதியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த கொள்ளையர்கள் லட்சுமியை மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் ஆகியவற்றை வழிப்பறி செய்துள்ளனர். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: