பழநி, பிப்.12: வருடம் முழுவதும் காலை கண் விழிப்பதிலிருந்து கண் அயரும் வரை பள்ளி, சிறப்பு பயிற்சி, டியூசன் என பரபரப்பாக இருப்பவர்கள் மாணவர்கள். இவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் ஆண்டு இறுதி தேர்விற்குப் பின் 2 மாதங்கள் விடுமுறை விடப்படும். இக்காலங்களில் உறவினர் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, ஓய்வு எடுப்பதென பொழுதைக் கழிப்பது வழக்கம். ஆனால் மாறிவரும் நாகரீக உலகில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினர் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் சுற்றுலா போன்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்கு செய்யும் செலவுகள் சுருக்கப்பட்டு, தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள செலவிடுகின்றனர். இதன் காரணமாக இவ்விடுமுறை காலங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஓவியம், கராத்தே, யோகா, கணிப்பொறி, நீச்சல், இசை, தையல், நடனம் போன்றவை கற்றுத்தரப்படும் பயிற்சி மையங்களில் சேர்த்து விடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் விடுமுறை காலங்களில் தற்போது இதுபோன்ற பயிற்சி மையங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பழநியைச் சேர்ந்த ஓவிய பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் சின்னப்பா கூறுகையில்,