திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் அறிக்கை

திருவள்ளூர், பிப்: 12: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:    திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று (12ம் தேதி)  மாலை 4 மணியளவில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன்  தலைமையில் பூவிருந்தவல்லி ஹரிஹரன் ரெசிடென்சியில் நடைபெற உள்ளது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் இ.பரந்தாமன்,  பூவை சி.ஜெரால்டு,  ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், ம.ராஜேந்திரன், மா.ராஜி, ஜி.ஆர்.திருமலை,  ஜெ.ஜெய்மதன், கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துக்  கொள்கின்றனர். பூவிருந்தவல்லி நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் வரவேற்கிறார். வருகின்ற மார்ச் 1ம் தேதி நடக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பிப்ரவரி 20ம்  தேதி பூவிருந்தவல்லி தொகுதியில் நடைபெறும் ஊராட்சி சபை மற்றும் வாக்குச்சாவடி பணிக்குழு ஆலோசனைக் கூட்டம். வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.  இந்த கூட்டத்திற்கு ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்  கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: