காரைக்குடி, பிப். 8: இந்தியாவில் நீரிழவு நோயினால் பாதிக்கப்படுபவர்களில் 20% பேர் அரிசையை மட்டுமே உட்கொள்வதுதான் காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறுதானியங்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. இதனை உட்கொண்டால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:
சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன. பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிகளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியை தடுக்கிறது. சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன.