மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் தேசிய டி20 கிரிக்கெட் தமிழக அணி வெற்றி

மதுராந்தகம், பிப்.8: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஜேகே கன்சல்டன்சி நிறுவனம் இணைந்து தேசிய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி மருத்துவக்கல்லூரி விளையாட்டு திடலில் கடந்த 3 மாதங்களாக நடத்தியது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன.இதன் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற மெட்ராஸ் ராயல் கிளப் அணியும், ஜாங்கிட் கிரிக்கெட் கிளப் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதைதொடர்ந்து, சாம்பியன் பட்டம் வெற்ற மெட்ராஸ் ராயல் கிளப் அணிக்கு முதல் பரிசாக ₹1 லட்சம், கோப்பையும், 2ம் இடம் பிடித்த ஜாங்கிட் அணிக்கு ₹50 ஆயிரம், கோப்பை, 3ம் பரிசு பெற்ற அணிக்கு ₹10,000 ஆகியவற்றை ஜேகே கன்சல்டன்சி சர்வீஸ் இயக்குனர் ஜேகே அமர்நாத், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்குனர் அன்பழகன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியின்போது கேசவமூர்த்தி, பாலு, கண்ணன், கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: