உடுமலை, பிப். 7: திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி கால்வாயில் 3ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் பகிர்மான கால்வாய்களில் சில விவசாயிகள் நூதன முறையில் தண்ணீர் திருடி வருகின்றனர்.
கால்வாயில் இருந்து பிவிசி குழாய் மூலம் தங்கள் தோட்டத்துக்கு திருட்டுத்தனமாக தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இது வெளியில் தெரியாமல் இருக்க குழி தோண்டி அதன்மேல் ஓலைகளை போட்டு மூடி வைத்துள்ளனர். தீபாலபட்டியில் இப்படி தண்ணீர் திருட்டு நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.