திருப்பூர், பிப். 6: திருப்பூர், அங்கேரிப்பாளையம் செல்லும் ரோடு சேறும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர், அங்கேரிப்பாளையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அப்பகுதியில் சுமார் 100 பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இவ்வழியை பயன்படுத்தி திருமுருகண்பூண்டி, அவிநாசி, பூலுவப்பட்டி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால், தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பாதையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.