திருத்துறைப்பூண்டி, பிப்.2: திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர பகுதிகளில் புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள்அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. பல இடங்களில் புதிய மின்கம்பத்தில் விளக்குகள் இரவு பகலாக எரிகிறது. நகர பகுதியில் ராம மடத்தெரு, துரவுபதை அம்மன் கோயில் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும் இரவு பகலாக எரிகிறது. மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இரவு பகலாக மின்விளக்கு எரிகிறது. நகர பகுதியை பொறுத்தவரை கடந்த ஓராண்டாக தனியார் நிறுவனம் தெருவிளக்கு பராமரித்து வருகிறது. இதற்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிகிறது. மின்சார கட்டணம் நகராட்சி தொடர்ந்து செலுத்துகிறது. பல இடங்களில் இரவு பகலாக எரியும் மின்விளக்குகளால் மின்சார கட்டணம் கூடுதலாகதான் ஆகும்.