அய்யன் திருக்குறள் இலக்கிய பேரவை ஆண்டு விழா

வத்தலக்குண்டு, ஜன. 29: வத்தலக்குண்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவை 20ம் ஆண்டை முன்னிட்டு வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடம், கட்டுரை, ேபச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.அதிமுக நகர செயலாளர் பீர்முகமது தலைமை

வகித்தார். பேரவை தலைவர் சூரியமூர்த்திவரவேற்றார். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கனிபாய் மாணவ, மாணவிகளுக்குதிருக்குறள் புத்தகம் வழங்கி போட்டிகளை துவக்கி வைத்தார்.இதில் பேரவை செயலாளர் பால்ராஜ், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரத்தினம்,முன்னாள் அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி, கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைதலைவர் நல்லமுகமது, காந்திநகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர்.

Related Stories: