சர்வதேச சிலம்பாட்ட போட்டி திருச்சி மாணவ, மாணவிகள் தங்கம் வென்று சாதனை

திருச்சி, ஜன.23:  கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டி கோவா தலைநகரில் இந்த மாதம் 17, 18 ,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ள திருச்சியை சேர்ந்த காவலர் அரவிந்த் தலைமையில் கடந்த ஒரு மாதமாக  150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அதில் இருந்து மாணவர் பிரிவிற்காக 5 மாணவர்களையும், மாணவிகள் பிரிவிற்காக 4 மாணவிகளையும் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் மவுலின், காமேஸ்வரன், ஜீவா, ஹரிஷ்வரன் மற்றும் ஸ்ரீ மாலன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஷாலினி, சுகிதா, நவசக்தி மற்றும் ராகவி கலந்துகொண்டு தனி பிரிவில் தங்கம் வென்றனர். கோவாவில் இருந்து நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: