காங்கயம், ஜன. 22: காங்கயம் - தாராபுரம் சாலையில் குள்ளம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையின் சுவர் இடிந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் - தாராபுரம் சாலையில் குள்ளம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையின் சுவர் இடிந்துள்ளது. மேலும் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், தரை உடைந்தும் சேதமடைந்து உள்ளது.