திருப்பூர், ஜன. 22: திருப்பூர், செல்லம் நகர் பகுதியை சேர்ந்த தர்மராஜ் - காமாட்சி தம்பதியினருக்கு, பிரகாஷ் (30), விக்னேஷ் (21) என்ற இரு மகன் உள்ளனர். இதில், பிரகாசுக்கு திருமணமானம் ஆகிவிட்டது. 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சகோதரர்கள் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று முன்தினம் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியான சின்னக்கரை ஓடை பகுதியில் கழுத்தில் காயங்களுடன் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில் அண்ணன் பிரகாஷிடம் போலீசார் விசாரித்ததில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மது போதையில் இருந்த விக்னேஷ் தங்களது தாயை தவறாக பேசியுள்ளார்.