திருப்பூர், ஜன. 22: திருப்பூரில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். திருப்பூர், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாரயத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் பழனிசாமி துவங்கி வைத்தார். இந்த பேரணி தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியினை சென்றடைந்தது.