ஊட்டி, ஜன. 22: ஊட்டி எல்க்ஹில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருத்தேர் விழா நேற்று வெகுவிமா–்சையாக நடைபெற்றது. ஊட்டி எல்க்ஹில் மலையில் 90 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த முருகன் கோவில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோயில் 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை பூசத்தன்று நடக்கும் தைபூச திருத்தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருத்தேர் விழா கடந்த 11ம் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 20ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலை 7 மணியில் இருந்து 11ம் நாள் பூஜை, பெருந்திரு முழுக்காட்டல் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.