செம்பட்டி, ஜன. 22: கொடைரோடு அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று காலையில் பழனி இருந்து ஒரு அரசு பஸ் மதுரைக்கு வந்துக்கொண்டிருந்தது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி சாமியார் புதூரைச் சேர்ந்த மதிவாணன்(30), என்பவர் ஓட்டி வந்தார். பஸ் நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் வந்தபோது, பள்ளபட்டி பிரிவில் இருந்துமோட்டார் சைக்கிளில் ஒருவர் சாலையை குறுக்கே கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் இடது புறமாக பஸ்சை திருப்பிய போது, நிலை தடுமாறி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளனது.