திருமணம் செய்வதாக பெண் ஏமாற்றியதாக வாலிபர் புகார்

கோவை, ஜன.22:  பெண் ஒருவர் காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும் பெண்ணின் உறவினர்கள் தன்னை தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம்வாலிபர் ஒருவர் மனு அளித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் இம்மானுவேல்.இவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்த பின் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘ கோவை கவுண்டம்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருகிறேன். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் என்னை பல வருடங்களாக காதலித்துவிட்டு சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார். நான் அவருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்றுள்ளேன். திருமணமும் செய்துள்ளேன். ஆனால், அது பதிவு செய்யப்படவில்லை.

இதனிடையே அந்த பெண் என்னை ஏமாற்றியதை அறிந்து அவரது இல்லத்திற்கு சென்று கேட்டபோது அவரது உறவினர்கள் என்னை தாக்கினர். அது மட்டுமல்லாமல் என்னிடம் அவர் காதலித்ததற்கு உண்டான ஆதாரங்கள் அனைத்தும் இருந்த நிலையில் அதனை என்னை தாக்கி பிடுங்கி அழித்துவிட்டனர். இது குறித்து புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை ஆகையால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளேன்,’’ என்றார்.

Related Stories: