மின்கம்பி உரசியதால் டிராக்டரில் தீ குளித்தலையில் பரபரப்பு

குளித்தலை, ஜன.22: மின்கம்பி உரசியதால் ஓடும் டிராக்டரில் தீ விபத்து ஏற்பட்டதால் குளித்தலையில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர், மாட்டுக்கு தீவனமாக சோளத்தட்டையை டிராக்ட ரில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். டிராக்டரை சத்தியமங்கல த்தை நேர்ந்த சுப்பிரமணி ஓட்டினார்.

அப்போது டிராக்டர் அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெரு வழியாக செல்லும் போது சாலையோரம் தாழ்வான நிலையில் இருந்த மின்கம்பி உரசியதில் சோளத் தட்டையில் திடீரென தீ பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங் கியது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தனது வீட்டிலிருந்த தண்ணீரை ஊற்றி அணை க்க முயற்சி செய்தனர். ஆனால் முடிய வில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முசிறி தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். டிராக்டர் டிரைவர் சுப்பிரமணி, தெரு குறுகிய வளைவாக இருந்ததால் பதட்டத்தில் டிராக்டரில் இருந்த சோளத்தட்டையை ஹைட்ராலிக் மூலம் கீழே இறக்கி விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: