ஆவடி, ஜன. 18: ஆவடி பட்டாபிராம் அன்னம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). தனியார் நிறுவன டிரைவர். இவரது தம்பி செல்லக்குமார் (24). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு பொங்கலை முன்னிட்டு செல்லக்குமார் தனது நண்பர்கள் பன்னீர்செல்வம், அருண்பாபு, விஜயகண்ணன் மற்றும் சிலருடன் வீட்டுக்கு மது பாட்டில்களுடன் வந்துள்ளார். பின்னர் அனைவரும் வீட்டு மாடியில் மது அருந்தியுள்ளனர். இதனை அறிந்த சதீஷ்குமார் தனது உறவினர்கள் பிரேமா (50), கார்த்திக் (30) ஆகியோருடன் மாடிக்கு வந்து தம்பியான செல்வகுமாரை தட்டிக்கேட்டுள்ளனர். இதனையடுத்து செல்வகுமாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்களுடன் செல்லகுமார், நண்பர்கள் தகராறில் ஈடுபட்டனர்.