திருவொற்றியூர், ஜன.18: மாதவரம் வங்கியில் அலாரம் திடீரென ஒலித்ததால் மக்கள் திரண்டனர். இதனால், பெரும் பரபரப்பு நிலவியது.சென்னை மாதவரம் தபால் பெட்டி சாலையில் சிண்டிகேட் வங்கி உள்ளது. பொங்கலை முன்னிட்டு வங்கிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இங்கு காவலாளி மட்டும் பணியில் இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில், நேற்று அதிகாலை வங்கியின் அலாரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வங்கி முன் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.