முத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை அருகே காரைக்குடி-திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியான உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட் அருகில் சாலை அமைக்கும் பணியில் ரயில்வே நிர்வாகத்தினர் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வந்தனர். இதில் ரயில்வே கேட்டிலிருந்து நாச்சிக்குளம் பள்ளிவாசல் பகுதிக்கு செல்லும் சாலை பிரிவு இடத்தில் சாலை பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது அங்கு ஏற்கனவே ஆக்கிரமித்து கடை கட்டியிருந்த நபர் ஒருவர் இது எனது இடம் என்று குறுக்கீட்டு பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அந்த சாலை பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நாச்சிக்குளம் பகுதிக்கு செல்லும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி வாகனங்கள் செல்ல மிக இடையூறாக உள்ளது. அதேபோல் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அப்பகுதி ஜமாஅத் சார்பில் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து சாலை பணியை தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: