கரூர் அருகே கூரை வீடு தீயில் எரிந்து பொருட்கள் சேதம்

க.பரமத்தி, ஜன.11: கரூர் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து பொருள்கள் சேதமானது.கரூர்  மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் குடிசை  வீட்டில் பார்வதி (65) குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று தீ  விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. அப்போது தீ மளமளவென பரவி வீடுகள் முற்றிலும் எரிந்தது.இது குறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்  வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மற்ற வீடுகளுக்கு பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.

இந்த  தீ விபத்தில் சமையல் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவை எரிந்தன. இதில்  அதிஷ் டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எரிந்து போன பொருட்களின் சேத  மதிப்பு உடனடியாக தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து  வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: