கரூர், ஜன.11: கரூர்அருகே உள்ள தளவாபாளையத்தில் கடை வீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாருதி காரை சோதனை செய்தனர். இதில் 13 மூட்டை மணல் இருப்பது தெரிய வந்தது. காரையும், மணல் மூட்டைகளையும் வேலாயுதம் பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த புஞ்சை கடம்பங்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் (34), கேசவன்(29) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேப்டாப் திருட்டு: கரூர் வெள்ளாளப்பட்டி ஆர்எஸ்.புதுாரை சேர்ந்த மதிசெல்வன்(19) என்பவர் கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது இவரது லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். மதிசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் கரூர் டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.