சீர்காழியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்காததால் சாலை மறியல்

சீர்காழி, ஜன.10: சீர்காழியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழி ரயில்வே சாலையில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை தமிழக அரசு அறித்த பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 ரொக்கம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து பரிசு பொருட்களுடன் வழங்க வேண்டிய பணம் தீர்த்து விட்டதாக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு கடையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: