தஞ்சை, ஜன. 9: தஞ்சை விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விதை பரிசோதனை தொழில்நுட்ப செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.தஞ்சை அருகே காட்டுத்தோட்டத்தில் வேளாண்துறையின் விதை பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் புனிதவதி, உதவி பேராசிரியர் கருணாகரன், இளங்கலை 2ம் ஆண்டு மாணவ பிரதிநிதி தனவர்தன், மாணவிகள் பிரதிநிதி ஹர்சவர்த்தினி உட்பட 70 மாணவ, மாணவிகள் வந்தனர்.
அவர்களை விதை பரிசோதனை அலுவலர் பிரபாகர் வரவேற்று விதை பரிசோதனை நிலையத்தின் செயல்பாடு, விதை மாதிரிகள் பெறுதல், பதிவு செய்தல், முடிவு அறிவித்தல், பூச்சிநோய் தாக்குதல் கணக்கீடு மற்றும் பிறரக கலவன் பரிசோதனை பற்றி செயல்முறை விளக்கமளித்தார்.