ஒரத்தநாடு ஜன. 9: ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டு தெற்கு சிவகொல்லை பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் மேகநாதன் (39). பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மேகநாதன். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.