மதுராந்தகம், ஜன.8: விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தேஸ்வர் அரவிந்த் (19). இவர், மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி, 3ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக அனைத்து மாணவர்களும் வந்தனர். ஆனால் தேஸ்வர் மட்டும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்களும் விடுதி ஊழியர்களும் அவரை தேடியபோது விடுதி வளாகத்தில் ஒரு அறையில ்தேஸ்வர் அரவிந்த் தூக்கில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.