கேரள பந்த் எதிரொலி ஒன்பதாறு செக்போஸ்டில் வாகனங்கள் நிறுத்தம்

உடுமலை, ஜன. 4: சபரிமலையில் இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து, கேரளாவில் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் வாகனங்கள் ஓடவில்லை. உடுமலையில் இருந்து கேரளாவில் உள்ள மறையூர், மூணாறு, கோவில்கடவு, காந்தலூர் உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி பஸ்கள் இயக்கப்படுகிறது. இப்பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடுமலைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். பந்த் காரணமாக, கேரளாவில் இருந்து உடுமலைக்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை.அதேபோல், உடுமலையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஒன்பதாறு செக்போஸ்டுடன் நிறுத்தப்பட்டன. கேரள வியாபாரிகள் வராததால் உடுமலையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மேலும் உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், அமராவதி நகர் எஸ்ஐ., ரவி மற்றும் கரீம் ஆகியோர் ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: