காரைக்கால், ஜன.3: காரைக்கால் மார்க் துறைமுகம் சார்பில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில் நாளை (4ம் தேதி) நடைபெறுகிறது. இது குறித்து, காரைக்கால் மார்க் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: காரைக்கால் மேல வாஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் மார்க் துறைமுகம், முதன்முறையாக, எல்.அண்டு டி நிறுவனத்துடன் இணைந்து, சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை நாளை (4ம் தேதி) காலை 9.30 மணி முதல் காரைக்கால் பஸ் நிலையம் எதிரே உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடத்தில் நடத்துகிறது. இம்முகாமில், ஆசாரி, கொத்தனார், பிட்டர் மற்றும் எலக்ட்ரிசியன் ஆகிய 4 வேலைகளுக்கு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்கிறது.