மின்வாரிய ஊழியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை

சென்னை, ஜன.3:  செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி, சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் கணேஷ் (45).  தனியார் கார் கம்பெனி  மேனேஜர். இவரது  மனைவி உஷா (40). செங்கல்பட்டு மின்வாரியத்தில் பில் கலெக்டராக பணியாற்றுகிறார்.இந்நிலையில், கடந்த வாரம் கணேஷ், வீட்டை பூட்டிக்கொண்டு  வேலூருக்கு குடும்பத்துடன் சென்றார்.

நேற்று காலை  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் கணேஷுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் ஊர் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 50 சவரன் நகை, ₹50 ஆயிரம் பணம், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ₹30 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில்  செங்கல்பட்டு தாலுகா  போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: