பொன்னமராவதி,டிச.19: பொன்னமராவதியில் நீண்ட நாட்களாக செயல்படாமல் கிடக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் தொட்டியினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பில் பொன்.புதுப்பட்டி பிடாரி கோயில் அருகில் சேங்கை ஊரணியின் தென் கரையில் பொன்னமராவதி பகுதி மக்களுக்கு தூய குடிநீர்வழங்குவதற்காக குடிநீர்சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு இதன் சேவை கடந்த 2015-2016ல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு 18லிட்டர்கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ரூ5க்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தூய குடிநீரை குறைவான விலைக்குப்பெற்று வந்தனர்தினசரி நூற்றுக்கணக்கான கேன்கள் வழங்கப்பட்டு வந்தது.