இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் வீட்டு வாடகைப்படி உயர்த்தி வழங்ககோரி ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு

ஜெயங்கொண்டம் ,டிச.19 :ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வீட்டு வாடகைப் படி உயர்த்தி வழங்ககோரி ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் புதிய வட்டமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த வருடம் மே 8ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. ஏழாவது ஊதியக்குழுவின் படி வட்ட தலைநகரில் அமைந்துள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வீட்டுவாடகைப்படி நிலை மூன்றின்படி குறைந்தபட்சம் ரூ 1500 முதல் அதிகபட்சம் 2500 வரை வழங்கப்பகிறது. எனவே ஆண்டிமடம் வட்ட தலைநகரில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் நிலை மூன்றிர்கான உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படி அனுமதிக்க வேண்டும் என ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: