அரியலூர், டிச.18: ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையக்கப்படுத்திய நிலத்திற்கு 25 மடங்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலங்கள் கையக்கப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் எந்தவித நிறுவனமும் கட்டவில்லை. நிறுவனம் அமைத்தல் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று ஆவலில் இருந்த கிராம மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து குறைந்த விலைக்கு விற்ற நிலத்திற்கு இன்றைய மார்க்கெட் மதிப்பு விலை வேண்டி அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.