ஆவடி, டிச.18: பட்டாபிராம், முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27), டிரைவர். கடந்த 15ம் தேதி இரவு சந்தோஷ் வேலை முடிந்து மின்சார ரயிலில் பட்டாபிராம் வந்தார். அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்பகுதியில் உள்ள கோபாலபுரம் மெயின்ரோட்டில் வந்த அவரை 4 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். குடிபோதையில் இருந்த அவர்கள் சந்தோஷை சரமாரியாக உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிறகு படுகாயமடைந்த சந்ேதாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
.