மாமியாரை தாக்கிய மருமகன் உள்பட 5பேர் மீது வழக்கு

தாரமங்கலம், டிச.16: தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிவேல்(37). இவருக்கும் வேம்படிதாளத்தைச் சேர்ந்த செல்வராஜ்-மாதம்மாள் தம்பதியின் மகள் ராஜசுந்தரிக்கும், கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால், குழந்தையை விட்டு விட்டு, ராஜசுந்தரி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ேபரக்குழந்தையை பார்க்க, ராஜசுந்தரியின் தாய் மாதம்மாள், நேற்று கருக்கல்வாடிக்கு சென்றார். அப்போது குழந்தையை பார்க்க விடாமல், பழனிவேல் மற்றும் அவரது உறவினர்கள் தடுத்தனர். பின்னர் மாதம்மாளை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த மாதம்மாள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்த புகாரின் ேபரில், பழனிவேல், அவரது அண்ணன் சடையன், மனைவி குப்பாயி, தங்கை லட்சுமி உள்பட 5பேர் மீது, தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: