‘மார்கழி திருவிழா 2018’ பக்தி சொற்பொழிவு இன்று துவக்கம்

கோவை,  டிச. 16: மார்கழி திருவிழா 2018 என்னும் பக்தி சொற்பொழிவு கோவையில் இன்று துவங்குகிறது.கோவை மார்கழித்திருவிழா பக்தி சொற்பொழிவு சுந்தராபுரம் செங்கப்ப  கோனார் திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிறு) துவங்கி, டிச.22ம் தேதி வரை  நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு அருட்பணி மன்றத்தினரின் திருமுறை  பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. இன்று ஜோதி பார்வதி  குழுவினரின் பகவான் நாமசங்கீர்த்தனம், நாளைை (17ம் தேதி) ‘ஆதிசங்கரர்’ குறித்து  பேராசிரியை குருஞானாம்பிகை, 18ம் தேதி ‘வள்ளலார்’ குறித்தும், 19ம் தேதி  ‘ஆழ்வார்களும், கம்பனும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முருகேசன், 20ம் தேதி  ‘ரமணரின் வாழ்வும் வாக்கும்’ குறித்து டாக்டர் கலாமணிரங்கசாமி, 21ம் தேதி  ‘சக்தியின் பெருமை’ குறித்து பேராசிரியை விஜயசுந்தரி, 22ம் தேதி  ‘மாயக்கண்ணனும் மகாபாரதமும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் திருநாவுக்கரசு  ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: