நாகர்கோவில், டிச.16: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவில் 3ம் நாளான இன்று (16ம் தேதி) இரவு 10.30 மணிக்கு சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் தங்கள் தாய் தந்தையான தாணுமாலய சுவாமி, அம்பாளை காணும் மக்கள் மார் சந்திப்பு நடைபெறுகிறது.இதற்காக குமார கோவில் முருகன் பல்லக்கிலும், அவரது வெள்ளிகுதிரை வாகனமும் நேற்று குமாரகோவில் இருந்து தனித்தனியே சுசீந்திரம் நோக்கி புறப்பட்டது. வரும் வழியில் பார்வதிபுரம் பாலம் நேற்று மக்கள் பார்வைக்கு திறந்து விட தயார் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து வெள்ளிக்குதிரை வாகனம் பாலத்தின் மீது சென்றது. பல்லக்கு கீழ் பகுதி வழியாக எடுத்து செல்லப்பட்டது.