மார்த்தாண்டம், டிச.16: மார்த்தாண்டம் அருகே நெல்வேலி வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்தவர் மேரி (65). நேற்று இவர் வீட்டருகே உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மேரியிடம் நல்ல தண்ணீரா? குடிக்கலாமா? என கேட்டுள்ளனர். அவர்கள் மீது பரிதாபப்பட்ட மேரி உடனே குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது மேரி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு அந்த வாலிபர்கள் பைக்கில் தப்பிச்சென்றனர்.