திருமணமாகாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை: திருவட்டார் அருகே சோகம்

குலசேகரம், செப்.21: திருவட்டார் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவட்டார் அருகே உள்ள ராமன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இதில் மகள் நர்சிங் படித்துவிட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மகன் பிரவீன்ராஜ் (26) ஆட்டோ ஓட்டி வந்தார். பிரவீன்ராஜ் தனக்கு திருமணம் ஆகவில்லையே என ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் ஒரு அறையில் இருந்த பிரவீன்ராஜ் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவை திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பிரவீன்ராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீன்ராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருவட்டார் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பிரவீன்ராஜ் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜன் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமாகாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை: திருவட்டார் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: