நாகர்கோவில் அருகே பைக் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

ஈத்தாமொழி, செப்.28: நாகர்கோவில் அருகே தொல்லவிளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி ஜிஜிக்கோ (24). முகிலன்விளை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 24ம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் ஈத்தாமொழியில் இருந்து பொட்டல்விலக்கு பகுதிக்கு பைக்கில் சென்றவர் வலது பக்கமாக திரும்பி உள்ளார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் ஆண்டனி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ஆன்டனிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டனி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகர்கோவில் அருகே பைக் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: