திருவிதாங்கோட்டில் ஊட்டச்சத்து மாத விழா

தக்கலை, செப். 27: திருவிதாங்கோட்டில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. தக்கலை வட்டார ஊட்டச்சத்து மாத விழா வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் நாகேஸ்வரி தலைமையில் திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நசீர் குத்து விளக்கேற்றி வைத்தார். இதில் செயல் அலுவலர் சகாய மேரி சசிகலா, டாக்டர் ஜெனிஷா வினோதினி, வட்டார மேற்பார்வையாளர் தமிழ் செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கிரிஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்து குறித்து விளக்க உரையாற்றப்பட்டது. ஆரோக்கியமான குழந்தை மற்றும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post திருவிதாங்கோட்டில் ஊட்டச்சத்து மாத விழா appeared first on Dinakaran.

Related Stories: