வத்தலக்குண்டுவில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

வத்தலக்குண்டு, டிச. 12:  வத்தலக்குண்டு 14வது வார்டு திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சின்னதுரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன், துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் கனிக்குமார், நகர அவைத்தலைவர் ஹக்கீம் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான சாமிநாதன், கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்வுமான ஐபி செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி பேசினர். கூட்டத்தில் மேலமந்தை பகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 25 பேர் விலகி திமுகவில் இணைந்தனர். இதில் நிர்வாகிகள் முருகேசன், சிதம்பரம், முத்துப்பாண்டி, கோபால், குமரவேல், அன்பு, அமுதவேல், சின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் சாம்சன் நன்றி கூறினார்.

Related Stories: