சென்னை: சென்னை கண்ணப்பர் திடல், மூர்மார்க்கெட் பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்து தருமாறு திமுக எம்எல்ஏ கோ.எஸ்.ரவிச்சந்திரன் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எழும்பூர் தொகுதி 104வது வார்டில் சுந்தரம் பிள்ளை தெருவை சுற்றிய பகுதி தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 61வது வார்டில் உள்ள மாநராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறிய அளவில் கழிவுநீர் அகற்று நிலையம் அமைக்க வேண்டும். இதற்கான தடையில்லா சான்றிதழை குடிநீர் வாரியத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.