திருத்தணி, டிச. 12: திருவாலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 192 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு திருவாலங்காடு கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மகாலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜா, ஒன்றிய நிர்வாகிகள் சி.சந்திரசேகர், த.ஜீவன், பி.சாந்திபன்னீர்செல்வம், வி.மனோகரன், எஸ்.பி.நூருல்லா, த.தினகரன், ஏ.பி.செந்தில்குமார், வி.ஜெகதீசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சி.ஜெயபாரதி, என்.அப்துல்ரகீம், மற்றும் குமார், அரிபாபு, மதுரை, சீனிவாசன், துளசிமணி, நந்தகுமார், சௌந்தர், தே.சம்பத், ஆர்.குமார், தே.ஏழுமலை, ம.வேழவேந்தன், திருவருட்செல்வம், வெங்கடேசன், சேகர், பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். திருவள்ளூர்: திருவள்ளூர் சிஎஸ்ஐ கவுண்டி மேல்நிலை பள்ளியில், 21 பள்ளிகள் சேர்ந்த 5,500 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.