கரூர், டிச. 11: கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இணைய தளத்துடன் கணினி வசதி செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் செய்யும்போது கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை ஏற்க வேண்டும் என்பது உளளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதன்படி கரூர் மாவட்டத்தில் இந்த சங்கத்தை சேர்ந்த 45 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.