திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தக்கோரி பெண்கள் இணைப்புக்குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நேற்று தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பெண்கள் இணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுமதி தலைைம தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி, மாநில பொருளாளர் ேஜாஸ்பின், வக்கீல் முகமது அலி, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரா, முத்தமிழ் கலைமன்ற தலைவர் முருகையன், பாரம்பரிய பறை இசை நல கலைஞர்கள் சங்க செயலாளர் முருகராகன் உள்பட பலர் பேசினர்.