ஜெயங்கொண்டம், டிச.7: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிராஜன் மகன் ஐயப்பன்(23). கொத்தனார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தைக்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து பெற்றோர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக அழைத்து சென்று பரிசோதித்தனர். மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது நடந்ததை கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கொத்தனார் ஐயப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.