குன்னூர் ரயில்நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

குன்னூர்,டிச.7: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் வெடிகுண்டு சோதனை நடந்தது.பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மாவட்டம் முழுக்க பாதுகாப்பு பணிகளை தீவிரபடுத்த நீலகிரி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். இதன் பேரில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில், குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் களில் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று சோதனை நடத்தினர். குன்னூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில், நவீன கருவிகள் மூலம் சோதனைகளில் ஈடுபட்டனர். மேலும் சுரங்க பாதை தண்டவாளங்கள், பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் முழுமையான சோதனைக்கு பிறகுதான் அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories: