கோவை, டிச.4: கோவையில் கல்லால் தாக்கி பிச்சைக்காரரை கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். கோவை பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்தூரை அடுத்த தனியார் கல்லூரி அருகே உள்ள ஒரு ஆட்டோ கேரேஜ் முன்பு கடந்த 28ம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தலையில் கல்லால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்திய நிலையில் கிடந்தார். அதே பகுதியை சேர்ந்த சிலர் உயிருக்கு போராடிய அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், காயம்பட்டவர் அதே பகுதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர், அந்த நபரை கல்லால் தாக்கியவர் குனியமுத்தூர் அருகே மூவேந்தர் நகரை சேர்ந்த பெயிண்டர் செல்வம் (37).